ஐ.நா சபையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.மாநாட்டில் 200 நாடுகளின் பிரதிநிதிகள், உலகத் தலைவர்கள் மற்றும் 70,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான நிதி உதவியை பணக்கார நாடுகள் ஏழை நாடு களுக்கு வழங்குவது குறித்தான முக்கிய விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.